கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ''சிவப்பு எச்சரிக்கை''! தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் கடந்த மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வருகின்ற 25ஆம் தேதி வரை கனமழை நீட்டிக்கும் என சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ''சிவப்பு எச்சரிக்கை'' விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 204 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனால் தேசிய பேரிடர் மீட்பு குழு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் அனைத்து துறை அதிகாரிகளும் மீட்பு படை குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala 3 districts heavy rain Red alert


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->