முதல்வர் பதவியை விட, மாநில அந்தஸ்து எங்கள் உரிமை, அது கிடைத்தால் போதும்: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா..!
Kashmir Chief Minister Omar Abdullah says statehood is more important than the post of Chief Minister
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்றுக்கொள்வதைவிட நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மாநில அந்தஸ்து என்பது ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமை என்றும், மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என ஒரு செய்தித்தாளில் படித்தேன். அப்படியானால் அது நடக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனக்கு நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்றும், எங்கள் எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்துவதற்காக செய்தித் தாள்களில் விதைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர்கள் இன்னும் 05 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும், மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல. அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள் என்றும், இந்தக் கதை எங்கிருந்து வந்தது என்று தனக்கு தெரியும் என்றும், இங்குள்ள ஒரு செய்தித்தாளில் யார் இந்தக் கதையைப் போட்டார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும், இது எம்.எல். ஏ,க்களை பயமுறுத்துவதற்காக மட்டுமே போடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அந்தஸ்து வழங்க சட்டசபை கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மாநில அந்தஸ்து வழங்கிய மறுநாள் ஆளுநரிடம் சென்று சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எங்களை பயமுறுத்த முயற்சிக்காதீர்கள் என்றும், மாநில அந்தஸ்து எங்கள் உரிமை, அதை எங்களிடம் திருப்பி கொடுங்கள் என்றும் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
English Summary
Kashmir Chief Minister Omar Abdullah says statehood is more important than the post of Chief Minister