கள்ளகாதலால் அடுத்தடுத்து பறிபோன 3 உயிர்.! இளம்பெண்ணின் சோக வாழ்க்கை.!
karnataka women suicide for illegal love
கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் பார்வதி என்ற 30 வயது பெண் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பார்வதியின் பெற்றோர் இறந்த நிலையில், இவரது மூத்த சகோதரர் ஆறுதலாக இருந்து வந்துள்ளார்.
திடீரென அவரும் உயிரிழந்து விட்டதாக கருணை அடிப்படையில் பார்வதிக்கு அவர் வேலை செய்த தனியார் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் பணி கிடைத்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்து பணி செய்து வந்த பார்வதிக்கு அதே அலுவலகத்தில் வேலை செய்த சோம்நாத் என்ற 32 வயது நபருடன் தொடர்பு ஏற்பட்டது.
இந்த சோம நாத்க்கு திருமணம் ஆகி இருந்த நிலையில் சோமநாதன் கள்ளக்காதலை தெரிந்துகொண்ட மனைவி வேதா கடந்த ஜனவரி மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்த துக்கத்தில் சோமநாத்தும் தற்கொலை செய்துகொண்டார். தனது காதலால் இரு உயிர்கள் பறி போனதால் குற்ற உணர்ச்சியில் இருந்து வந்த பார்வதி கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
karnataka women suicide for illegal love