கள்ளகாதலால் அடுத்தடுத்து பறிபோன 3 உயிர்.! இளம்பெண்ணின் சோக வாழ்க்கை.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் பார்வதி என்ற 30 வயது பெண் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பார்வதியின் பெற்றோர் இறந்த நிலையில், இவரது மூத்த சகோதரர் ஆறுதலாக இருந்து வந்துள்ளார். 

திடீரென அவரும் உயிரிழந்து விட்டதாக கருணை அடிப்படையில் பார்வதிக்கு அவர் வேலை செய்த தனியார் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் பணி கிடைத்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்து பணி செய்து வந்த பார்வதிக்கு அதே அலுவலகத்தில் வேலை செய்த சோம்நாத் என்ற 32 வயது நபருடன் தொடர்பு ஏற்பட்டது. 

இந்த சோம நாத்க்கு திருமணம் ஆகி இருந்த நிலையில் சோமநாதன் கள்ளக்காதலை தெரிந்துகொண்ட மனைவி வேதா கடந்த ஜனவரி மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார். 

மனைவி இறந்த துக்கத்தில் சோமநாத்தும் தற்கொலை செய்துகொண்டார். தனது காதலால் இரு உயிர்கள் பறி போனதால் குற்ற உணர்ச்சியில் இருந்து வந்த பார்வதி கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka women suicide for illegal love


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->