கர்ப்பிணி மனைவியை கல்லாலேயே அடித்து கொலை செய்த கொடூரன்.. துடிதுடிக்க அரங்கேறிய வெறிச்செயல்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி பகுதியை சார்ந்தவர் சந்தீப் பணபட்டி.. இவரது மனைவி மஞ்சுளா (வயது 24). இந்த தம்பதியினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மஞ்சுளா தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். 

மது அருந்தும் பழக்கம் கொண்ட சந்தீப் தினமும் வீட்டிக்கு மது அருந்தி வந்து, மஞ்சுளாவிடம் தகராறு செய்து வந்துள்ளான். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, மஞ்சுளாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளான். 

இந்த நிலையில், நேற்று காலை நேரத்தில் மனைவியிடம் மீண்டும் தகராறு செய்த நிலையில், ஆத்திரமடைந்த கொடூரன் மனைவியின் தலையில் கல்லை வைத்து தாக்கியுள்ளான். இதனால் நிலைதடுமாறி விழுந்த மஞ்சுளா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மஞ்சுளாவின் உடலைக்கண்டு அதிர்ச்சியடைந்த சந்தீப் கதறி அழுதுள்ளான். 

பின்னர், அதே கல்லை வைத்து தனது தலையிலும் பலமுறை அடுத்து, சந்தீப்பும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளான். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைஅக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka pregnant girl murder by husband and attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->