கணவன் - மனைவி தகராறு.. மயங்கிய மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கொடூரம்.!
Karnataka Mysore Wife Killed by Husband due to Fight
கர்நாடக மாநிலத்தில் உள்ள டி.நரசிபுரா தோட்டமேலக்கோடு கிராமத்தை சார்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் தோட்டமேலக்கோடு கிராமத்தில் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மனைவி சாந்தம்மா (வயது 22). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களுக்குள் ஏற்படும் தகராறு அவ்வப்போது தொடர்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்றும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில், ரமேஷ் ஆத்திரமடைந்து தனது மனைவி சாந்தம்மாவை அடித்து உதைத்துள்ளார். இதில் நிலைகுலைந்த சாந்தம்மா மயங்கி விழவே, ஆத்திரம் தீராத ரமேஷ் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து தப்பி சென்றுள்ளார்.
வீட்டிற்குள் தீ எரிந்துகொண்டு இருக்க, ரமேஷ் தப்பியோடியதை கண்ட அக்கம் பக்கத்தினர் விபரீதத்தை புரிந்துகொண்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சாந்தம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான ரமேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Mysore Wife Killed by Husband due to Fight