மகளின் கைகளை தீயிட்டு கொளுத்திய தாய்.. பக்கத்து வீட்டிற்கு சென்று விளையாண்டதால் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


பக்கத்து வீட்டுக்கு விளையாட சென்ற சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தி, கைகளில் தீ வைத்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஹெப்பல் (Hebbal) பகுதியை சார்ந்த 35 வயது பெண்மணி, தனது 9 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், முதல் குழந்தை அவரது தந்தையுடன் இருக்கிறது. இந்நிலையில், ஹெப்பல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண்மணி, தனது 9 வயது மகளை கையில் தீக்காயத்துடன் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார்.

மேலும், சிறுமி விளையாடும் போது அவரது கைகளில் காயம் ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பாத மருத்துவர்கள் சிகிச்சையின் போது சிறுமியிடம் விசாரிக்கையில், தனது தாய் தனது கைகளை தீவைத்து கொளுத்தியதாக சிறுமி அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ஹெப்பல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், பக்கத்து வீட்டிற்கு சென்று நான் விளையாண்டதை கண்ட தனது தாய் வீட்டிற்கு அழைத்து வந்து தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று தனது கைகளில் தீவைத்து கொளுத்தியதாகவும் தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியின் தாயை கைது செய்து விசாரணை செய்கையில், தனது மகள் விளையாட்டின் போது கைகளால் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது என்று முதலில் தெரிவிக்கவே, காவல் அதிகாரிகளின் கிடுக்குபிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பான வாக்குமூலத்தில், " நான் கணவரை பிரிந்து எனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறேன். எனது மூத்த மகளும், எனது கணவரும் ஆர்.டி நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். எனது அண்டை வீட்டில் இருக்கும் நபர்கள் எப்போது என்னை பற்றி தவறாகவே கூறுவார்கள். எனது நடத்தை மீது அவதூறாக கூறுவார்கள். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த எங்களை வேறு காரணம் கூறி அவதூறாக பேசுவார்கள். அவர்களின் இல்லத்திற்கு சென்று எனது மகள் அவர்களின் குழந்தையுடன் விளையாடி வருவார்.

இது எனக்கு பிடிக்காது. இது தொடர்பாக மகளை பலமுறை கண்டித்து இருக்கிறேன். ஆனாலும், அவர் எனது பேச்சை கேட்பதில்லை. சம்பவத்தன்று குடும்ப சூழ்நிலை கருதி பல இடங்களுக்கு வேலை தேடி சென்று எங்கும் கிடைக்காத விரக்தியில் வீட்டிற்கு வந்தேன். எனது மகள் நான் வரும் நேரத்தில் வீட்டில் இல்லாமல், அண்டை வீட்டில் விளையாட சென்று வந்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை அடித்துவிட்டேன் " என்று தெரிவித்தார். தாயை கைது செய்த காவல் துறையினர் சிறுமியின் நலன் கருதி சொந்த ஜாமினில் விடுவித்து இருக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Hebbal Mother Burn 9 Aged Child Due to Mental Pressure


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->