விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகளாக ஒப்பிட்டு பதிவு.. கங்கனா ரணாவத் மீது வழக்கு பதிவு..! - Seithipunal
Seithipunal


விவசாயிகள் குறித்து சர்ச்சையான கருத்தை பதிவிட்ட கங்கனா ரணாவத் மீது  வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடினர். இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது.

இதற்கிடையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை இட்டிருந்தார். மேலும், விவசாயிகளை காலிஸ்தான் தீவரவாதிகளாக சித்தரித்து பதிவிட்டார்.

இந்த பதிவுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் அவர் மீது டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவினர்புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில்  கங்கனா ரணாவத் மீது பிரிவு 295ஏ-வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangana Ranaut charged for comparing Kazakhstan to militants


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->