வருமானம் இல்லாமல் தவிக்கும் பாலியல் தொழிலாளர்கள்.. கைக்குழந்தையுடன் கண்ணீர் பேட்டி..!!
Kamathipura sex worker speech with baby loss of income and food
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தினமும் அன்றாட பணிகளை செய்து பிழைத்து வந்த மக்கள் அனைவரும், வருமானத்தை இழந்து பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அரசு சார்பாக மக்களுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை காமேந்திரபுரா பகுதியில் அதிகளவில் பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் வருமானத்தை இழந்து, பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், நாட்டு மக்களுக்கு அரசு உதவி செய்கிறது. எங்களுக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை, அரசு எங்களின் நிலையை புரிந்துகொண்ட உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைப்போன்று, சில தன்னார்வ நபர்கள் கொடுக்கும் உணவுகள் மூலமாக தங்களின் தினத்தை அரைபசியுடன் நகர்த்தி வருவதாக குழந்தையுடன் இருந்த பெண்மணி கண்ணீருடன் தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kamathipura sex worker speech with baby loss of income and food