அதற்கு தடுத்த 12-வது மனைவி.. அடித்தே சோலியை முடித்த குடிகார கணவன்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த நபர்  மது போதையில் தனது மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில்  அவர் கொலை செய்தது அவரது 12ஆவது மனைவி என்ற செய்தி காவல்துறை மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிடைய செய்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தாராப்பூர் கிராமத்தைச் சார்ந்தவர் ராமசந்திர தூரி.. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவி சாவித்திரி தேவியுடன் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது மனைவியை அடித்தே கொலை செய்து இருக்கிறார் ராமசந்திர தூரி. 

மனைவி இறந்தது தெரியாமல் போதையில் அவருடனேயே உறங்கி இருக்கிறார். பின்னர் அதிகாலை அவரது மகன் தாய் இறந்ததைக் கண்டு  அங்குள்ள வார்டு கவுன்சிலரிடம் தகவல் தெரிவிக்க அவர் பொதுமக்கள் துணையோடு ராமச்சந்திரனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். காவல்துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைச் சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

காவல்துறையின் விசாரணையில் ராமசந்திர தூரி 12 முறை திருமணம் செய்து இருக்கிறார் என்ற உண்மை சம்பவம் வெளியாகி இருக்கிறது. அவரது கொடுமை தாங்காமல் 11 மனைவிகளும் அவரை விட்டு சென்றுவிட  பனிரெண்டாவதாக திருமணம் செய்த சாவித்திரி தேவியுடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவரை கொலை செய்திருக்கிறார். இதனால் காவல்துறைக்கு மற்ற 11 மனைவிகளும் என்னானார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த 11 மனைவிகளில் விவரங்கள் குறித்த தகவல்களை அவரிடம் விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jharkand man who murder his 12th wife in booze got arrested police probe investigaion


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->