பிபிசி செய்தி நிறுவன அலுவலகங்களில் ஐடி ரெய்டு.! 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய பல்வேறு மாநிலங்களில் இன்று காலை முதல் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் வருமான வரித்துறை சோதனையானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

அண்ணா நகரில் அமைந்துள்ள அசோக் ரெசிடென்சியின் உரிமையாளர் உடைய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை போட்டு வருகின்றனர்.  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழும் இடங்களில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.  

இத்தகைய நிலையில், பிரபல செய்தி நிறுவனமான பிபிசி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் அதிரடியாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது டெல்லி பிபிசி நிறுவன அலுவலகத்திலும் மும்பை பிபிசி நிறுவன அலுவலகத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It Raid In BBc delhi and Mumbai Office


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->