இந்தியாவில் ஹமாஸை தீவிரவாத பட்டியலில் சேர்க்க இஸ்ரேல் தூதர் அழைப்பு!!
Israel calls for adding Hamas to terror list in India
இந்தியா ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலிய தூதர் அழைப்பு.!!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் போரில் சுமார் 8,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் நேற்று கேரளாவில் நடைபெற்ற இஸ்லாமிய அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடத்திய நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மஷால் காணொளி வாயிலாக கலந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசியிருக்கிறார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கில்லன் இந்தியா ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய தூதர் நவோர் கில்லன் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நம்ப முடியவில்லை! ஹமாஸ் பயங்கரவாதி காலித் மஷால் கத்தாரில் இருந்து கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் 'புல்டோசர் இந்துத்துவா மற்றும் நிறவெறி சியோனிசத்தை வேரோடு' என்ற முழக்கத்தின் கீழ் பேசுகிறார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெருக்களில் இறங்கி கோபத்தை காட்டுங்கள் எனவும், ஜிஹாத்துக்குத் தயாராகுங்கள் எனவும், ஹமாஸை நிதி ரீதியாக ஆதரிக்கவும் மற்றும் சமூக ஊடகங்களில் பாலஸ்தீனியக் கதையை ஊக்குவிக்கவும் மாஷல் பேசியுள்ளார். எனவே இந்தியா தமிழ் சமஸ் அமைப்பை தீவிரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் கிருத்துவ ஜெப கூட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சுமார் 2500 ல் கலந்து கொண்ட இந்த ஜெப கூட்டத்தில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்ததில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்ததாகவும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கேரளாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் நேற்று இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் காணொளி வாயிலாக பேசிய நிலையில் இன்று காலை கிறித்துவ ஜெப கூட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என கேரள டிஜிபி உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Israel calls for adding Hamas to terror list in India