லவ் பிரேக்கப்.. ஆஸ்திரேலியாவில் இந்திய நர்சிங் மாணவி உயிருடன் புதைத்து  கொலை.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் இந்திய நர்சிங் மாணவி உயிருடன் புதைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள அடியில் வீடு நகரில் இந்தியாவை சேர்ந்த ஜாஸ்மின் கவுர் (வயது 21). இவர் அங்கு நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மின் கவுரும் காதலித்து வந்துள்ளனர். 

இதனிடையே இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜாஸ்மின் கவுர் காதலை பிரேக் அப் செய்துள்ளார். மேலும் காதலுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் காதலன் தன்னுடன் பேசும் படி ஜாஸ்மீனை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் ஜாஸ்மின் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத், ஜாஸ்மீனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி அடிலெய்டில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்த அவரை தனது நண்பரின் காரில் கடத்தி சுமார் 650 கிலோ மீட்டர் தூரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மலை பகுதிக்கு கொண்டு சென்று கண்களைக் கட்டி கழுத்தை அறுத்து அப்படியே உயிருடன் புதைத்துள்ளார். தற்போது இந்த விஷயம் வெளியில் தெரிய வர விசாரணையின் போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian nursing girl killed in Australia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->