ஆமதாபாத் விமான விபத்து: மீட்புப் பணியில் இந்திய ராணுவம்..!
Indian Army involved in Ahmedabad plane crash rescue operation
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அத்துடன், விபத்துக்குள்ளான விமானம் மருத்துவ கல்லூரி விடுதி மீதும் விழுந்துள்ளது. இதில் மருத்துவ மாணவர்கள் 05 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு மற்றும் சிலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விமான விபத்தைத் தொடர்ந்து நடக்கும் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவத்தினர் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து நடக்கும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டோருக்கு உதவி செய்ய 130 பேரை அனுப்பி வைத்துள்ளோம். இந்த குழுவில் இடிபாடுகளை அகற்றும் ஜேசிபி குழுவினர், மருத்துவக் குழுவினர், அதிவிரைவு குழுவினர், தீயை அணைக்கும் கருவிகளுடன் தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பொறியியல் குழுவினர் உதவி வருகின்றனர். ராணுவ மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளது.'என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Indian Army involved in Ahmedabad plane crash rescue operation