எல்லைதாண்டி உளவு வேலைக்கு அனுப்பப்பட்ட டிரோன்.. சுட்டுத்தள்ளிய இந்திய இராணுவம்.! - Seithipunal
Seithipunal


இந்திய எல்லைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பறந்துகொண்டு இருந்த பாகிஸ்தானின் இராணுவ டிரோனை, இந்திய இராணுவம் அதிரடியாக சுட்டு வீழ்த்தியுள்ளது. 

கடந்த சில மாதமாகவே இந்திய - சீன எல்லை தொடர்பான பிரச்சனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சீன இராணுவத்தின் கொடூரத்தால் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தாலும், சீனாவிற்கு வெளியே சொல்ல முடியாத அளவிற்கு உயிர் சேதம் ஏற்பட்டது. 

இதனால் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்து இருந்த நிலையில், சீன வீரர்கள் ஒருபுறம் லடாக் எல்லையில் அத்துமீறுவதும், மற்றொருபுறம் பாகிஸ்தான் வீரர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அத்துமீறுவதும் தொடர்ந்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இருந்து ட்ரோன் ஒன்று எல்லை தாண்டி பறந்து வந்துள்ளது. இதனைக்கண்ட இந்திய இராணுவ வீரர்கள், அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். டிரோனை கைப்பற்றி டி.ஜெ.ஐ தயாரித்த டிரோன் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Army Fired Tron coming from Pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->