மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்தியா பதிலடி: எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்..!
India response to Pakistan cross border attack again
எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது. தொடர்ந்து அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நமது ராணுவம் உரிய பதிலடி கொடுக்கிறது. இருப்பினும் பாகிஸ்தான் அடங்காமல் எல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உரி செக்டாரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் மற்றும் வெடிபொருட்கள் வெடிக்கும் சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் எல்லையில் மேலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
English Summary
India response to Pakistan cross border attack again