மே 18 வரை நீடித்த இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்...!
India Pakistan ceasefire extended until May 18
இந்திய ராணுவத்தால், காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது.

இதில் தொடர்ந்து 3 நாட்கள் நடந்த சண்டையில், இரு நாடுகளும் டிரோன்களால் தாக்கிக்கொண்டன. இதற்கிடையே கடந்த மே 10 அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த சூழலில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் தற்போது மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதில் இரு நாடுகளை சேர்ந்த ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள்(டிஜிஎம்ஓ) விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் டிஜிஎம்ஓக்களும் எல்லையிலுள்ள நிலைமையை மதிப்பாய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.மேலும் எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
அதுமட்டுமின்றி, எல்லையிலுள்ள படைகளின் அளவை குறைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
English Summary
India Pakistan ceasefire extended until May 18