இந்தியா வந்துள்ள பிரேசில் பிரதமர்.! இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்.. மகிழ்ச்சியான மோடி.!
india brazil sign in important agreement
இந்திய முழுவதும் நாளை குடியரசுதின கொண்டாடப்படுகிறது. இதையொட்ட நடைபெறும் விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டு அதிபர் ஜாகிர் பால்சோனரோ (Jair Bolsonaro) டெல்லி வந்தார். இன்று காலை டெல்லி வந்த அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பிரேசில் அதிபரின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் மோடி காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பிரேசில் அதிபரை இந்தியாவுக்கு வரவேற்பதாகவும் பிரேசில் அதிபரின் வருகை இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் என தமது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பிரேசில் அதிபரை இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையின் போது, இந்தியா பிரேசில் இடையே சுகாதாரம் மருத்துவம் உள்ளிட்ட 15 துறைகள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்து டெல்லியில் பிரதமர் மோடி பிரேசில் அதிபர் ஜாகிர் பால்சோனரோ முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தங்கள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி என்றும் இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பிரேசில் உறுதுணையாக இருந்துள்ளதக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
india brazil sign in important agreement