3 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஏர் இந்திய பெண் ஊழியர்.. விசாரணையில் காவல்துறை.!!
in telangana girl attempt suicide police investigation
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஏர் இந்திய நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணியாற்றி வந்த பெண்மணியின் பெயர் சிம்ரன் (வயது 22).
இவர் சம்சதாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், இன்று மாடியில் இருந்து தரையில் தலைகீழாக வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அக்கம் பக்கத்தினர் கீழே விரைந்தனர்.
பொதுமக்களின் முன்னிலையில் சிம்ரன் துடிதுடித்து உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிம்ரனின் உடலை கைப்பற்றினர்.
பின்னர் சிம்ரனின் உடலை அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரது அறைக்கு சென்று மேற்கொண்ட சோதனையில் தற்கொலைக்கான கடிதம் ஏதும் கிடைக்காத நிலையில், இவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in telangana girl attempt suicide police investigation