இப்படியும் பிட் அடிக்கலாமா..? காவலர் தேர்வில் இளைஞர் சூது.! இறுதியில் பரிதாபம்.!  - Seithipunal
Seithipunal


இளைஞர் ஒருவர் காவலர் தேர்வில் நூதனமான முறையில் காப்பி அடித்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்த மாநிலத்தில் முசாபர்பூர் என்ற பகுதியில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் தனசெய் என்ற இளைஞர் தேர்வறையில் நுழைந்த  முதலே வித்தியாசமாக நடந்து கொண்டு இருந்துள்ளார்.

தேர்வு கண்காணிப்பாளர் தீவிரமாக அவரை கண்காணித்து வந்துள்ளார். அப்போது தேர்வு எழுதுவதை போல நடித்துக்கொண்டு கொண்டு வாயை அசைத்து கொண்டே இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர் அவரை வேறு ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தி இருக்கின்றார். அப்போது அவர் ஹெட்போனை பயன்படுத்தி வேறு யாரிடமோ கேள்விகளுக்கான பதிலை கேட்டு இருக்கின்றார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவமானது அப்பகுதியில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in police exam sutdent have bit ultimate


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->