குழந்தையின்மை சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்ற இளைஞரின் வயிற்றல் இருந்த கர்ப்பப்பை.!! அதிர்ச்சியான மருத்துவர்கள்.!!
in mumbai youngster have karpapai in stomach doctors panic
நாம் வாழும் உலகில் பல விதமான விசித்திர சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நமது உடலில் நடக்கும் செயல்பாடுகளை நாம் முற்றிலும் அறிந்து கொள்வதே விசித்திரம் தான்.. அந்த வகையில் உடலின் உறுப்புகளால் ஏற்பட்ட விநோதத்தையும்., இளைஞர் ஒருவரின் விடிவுகாலமும் தான் இந்த குறிப்பு...
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சார்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக திருமண முடிந்துள்ளது. இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லாததால்., வழக்கம்போல பல ஏளன பேச்சுக்களை இவரும் - இவரின் மனைவியும் கேட்டுள்ளனர்.
ஒரு சமயத்திற்கு மேல் இவர்களின் பேச்சுக்களை பொறுக்க முடியாத இளைஞர்., மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் பல மருத்துவமனைக்கு சென்றும் பல ஒன்றும் இல்லாததால்., சந்தேகத்துடன் சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு சென்ற இவரின் நிலையை உணர்ந்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் விந்தணுக்கள் குறைவின் காரணமாக குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணியுள்ளனர். இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி காத்துகொண்டு இருந்துள்ளது.
அவரது அடிவயிற்று பகுதியை ஸ்கேன் செய்த சமயத்தில்., அவருக்கு பெண்களை போல கர்ப்பப்பை இருப்பதையும்., கர்ப்பப்பைகான குழாய் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். பின்னர் இதன் காரணமாக இவருக்கு விந்தணுக்கள் உற்பத்தி ஆகவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை வெளியே வெற்றிகரமாக எடுத்த மருத்துவர்கள்., அவருக்கு இனி உயிரணுக்கள் உற்பத்தியாகும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்., எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in mumbai youngster have karpapai in stomach doctors panic