மாமியார் - மருமகளை சீரழித்து வீடியோ எடுத்த காம கொடூரன்.! நட்பு பழக்கத்தால் அரங்கேறிய வினை.!!
in mumbai girl sexual harassment police arrest
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் சாமை சார்ந்த ஆசிஷ் துபே என்ற நபர் வசித்து வந்துள்ளான். இவன் சம்பவத்தன்று அதே பகுதியை சார்ந்த இளம்பெண்ணிடம் மரியாதையை நிமித்தமாக துவக்கத்தில் பழகி வந்துள்ளான்.
பின்னர் சில நாட்கள் கழித்த பின்னர் திருமண நிகழ்ச்சிக்கு இளம்பெண்ணை அழைத்துள்ளான்.. இவனது அழைப்பை ஏற்ற பெண்மணி மற்றும் அவரது மருமகள் (உறவுமுறையில் மருமகள்) ஆகியோரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் வைத்து இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்ட குளிர்பானம் வழங்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த தொடர்பான காட்சிகளை கொடூரன் விடியோவாக பதிவு செய்து வைத்துள்ளான்.
பின்னர் இது குறித்த விடியோவை காண்பித்து மிரட்டி பெண்ணின் மருமகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில்., இந்த கொடூரம் அரங்கேறிய போது இளம்பெண்ணின் மருமகளுக்கு 19 வயதாக இருந்துள்ளது.
காம கொடூரன் இருவரையும் தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில்., தற்போது 19 வயதாகும் பெண்மணி கர்ப்பமாக உள்ளார். இதனையடுத்து இவனது அட்டூழியங்களை பொறுக்க இயலாத பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதை அடுத்து., அங்குள்ள மேற்கு புறநகர் பகுதியில் வைத்து ஆசிஷ் துபேவை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in mumbai girl sexual harassment police arrest