50 வயது பெண்மணியை கடத்தி கற்பழித்த 48 வயது காமுகன்.! அடையாளத்திற்காக பெண் செய்த செயலால்., சிக்கிய கொடூரன்.!!
in mumbai girl rapped by 48 old man police arrest culprit
இந்த உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு விதமான பாலியல் தொல்லைகளுக்கு மத்தியில்., தங்களின் அன்றாட வாழ்க்கையை கழித்துக்கொண்டு., எதிர்கால நன்மைக்காக போராடி கொண்டு வருகின்றனர்.
பாலியல் தொல்லைகள் போன்ற குற்ற சம்பவங்களை குறைப்பதற்கு சட்டதிட்டங்கள் கடுமையாகும் பட்சத்திலேயே., பெண்களுக்கு எதிரான வன்முறை குற்ற சம்பவங்களை குறைக்க இயலும். பெரும்பாலும் பெண்களுக்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களே., அதிகளவு பாலியல் வன்கொடுமை செய்து வருவதும் நம்மிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள தானே மாவட்டத்தின் உல்லாஸ் நகர் பகுதியை சார்ந்த 50 வயதுடைய பெண்மணி., கடந்த ஜூன் மாதத்தின் 23 தேதியன்று பணியை முடித்துக்கொண்டு., இரவில் வீட்டிற்கு தனியாக திரும்பி அங்குள்ள சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
இந்த தருணத்தில்., இவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர்., ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தன்னை விட்டு விடும் படி கதறிய பெண்மணியை., கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்து., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதனையடுத்து பயந்துபோன பெண்மணி., இந்த விஷயம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும்., அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்து வந்தனர். இந்த சோதனையில்., கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்., சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில்., இதே பகுதியை சிறந்த லங்கன் தேவ்கர் என்ற 48 வயதுடைய இளைஞன் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து., பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். மேலும்., பாதிக்கப்பட்ட பெண்மணி காம கொடூரனின் மார்பகத்தில் அடையாளத்திற்காக கடித்து வைத்ததாகவும் கூறிய நிலையில்., மார்பில் காயத்தோடு இருந்த கொடூரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in mumbai girl rapped by 48 old man police arrest culprit