பிறந்த பச்சிளம் குழந்தையை மனதை கல்லாக்கி கழிவறையில் விட்டு சென்ற தாய்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்.!!
in mumbai girl delivery baby and through escaped in hospital
இந்தியாவின் மும்பை சயான் மருத்துவமனையில் நேற்று முன்தினதன்று கர்ப்பிணி பெண்ணொருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். இந்த நேரத்தில் சிகிச்சை பிரிவில் கூட்டம் அதிகமாக இருந்ததால்., குறித்த இளம்பெண் சிகிச்சைக்காக காத்திருந்துள்ளார். இந்த சமயத்தில்., பெண்ணிற்கு திடீரென பிரசவ வலியானது ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்த கழிவறைக்கு சென்று குறைமாத குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் பச்சிளம் குழந்தையை பிளாஸ்டிக் வாளியில் போட்ட நிலையில்., பெண் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
குழந்தையின் அழுகுரல் கழிவறையில் இருந்து கேட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்., குழ்நதையை மீட்டு விஷயத்தை மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்ததில்., பெண் டாக்சியில் ஏறி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து டாக்சியின் பதிவு எண் மூலமாக ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டதை அடுத்து., பெண்ணை கைது செய்தனர். பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில்., இப்பெண் சலூன் கடையில் பணியாற்றி வந்துள்ளார்.
மேலும்., பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்தான நிலையில்., இப்பெண்ணுடன் பணியாற்றி வந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இதனால் பெண் கர்ப்பமான நிலையில்., வீட்டில் இது குறித்த விஷயம் தெரியாமல் பெண் பார்த்துக்கொண்டு நிலையில்., இறுதியாக குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை தனது இல்லத்தில் ஏற்றுக்கொள்வார்களா? என்ற எண்ணத்தில் குழந்தையை கழிவறையில் விட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில்., பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in mumbai girl delivery baby and through escaped in hospital