மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.! இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலி., அலறும் 50 பேர்.!!
in Mumbai dangori building collapse 2 peoples died 40 trapped under collapsed building
இந்த உலகம் முழுவதும் பல்வேறு துயரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் துயரங்களை உணரும் நாம் அதற்கான அனுதாபத்தை தெரிவித்து வருகிறோம். இந்த உலகம் முழுவதும் ஒரு நொடியில் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது.
அவ்வாறு நடைபெறும் விபத்துகளில் சிக்கும் நபர்கள் தங்களின் உயிரையும்., உடமைகளையும் இழந்து வாடி வருகின்றனர். இதனால் குடும்பத்தின் தலைவனையும்., தலைவியையும்., பெற்றெடுத்த மகன் மற்றும் மகளையும் இழந்து பெரும் துயருக்கு உள்ளாகி வருகின்றனர்.
நாம் என்னதான் இணையதள தொழில்நுட்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும்., சில எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சாலைகளில் நாம் நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பின் சில விபத்துகளை கண்டிப்பாக பார்த்தவரே செல்லுவோம்.
Tamil online news Today News in Tamil
இந்த விபத்துகளை போன்று கட்டிட விபத்துகளும் தொடர்கதையாகியுள்ளது. கட்டிடங்களின் பராமரிப்பின்மை., கட்டிடங்களின் எழுப்பும் விதத்தில் உள்ள குறைபாடு காரணமாக சில கட்டிடங்கள் எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருக்கும் டோங்கிரி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் எதிர்பாராமல் திடீரென இடிந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இடிபாடுகளில் சுமார் 50 பேர் சிக்கியிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Mumbai dangori building collapse 2 peoples died 40 trapped under collapsed building