ஏழாவது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசி கொலை செய்த கொடூரம்..! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!!
in mumbai baby killed by her father friend police investigation going on
இந்த உலகம் முழுவதும் பலரும் பல விதமான முறையில் இறந்து வருகின்றனர். மேலும்., சிறு வயதுடைய பச்சிளம் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும்., பணத்திற்காக கடத்தி விற்கப்படுவதும்., கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருப்பதாக கூறியும் தொடர்ந்து அரங்கேறி பல கொலைகள் அரங்கேறி வருகிறது.
இது ஒரு புறமிருக்க சிசு கொலைகள் என்ற பெயரில் கருக்கலைப்புகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்கள் நம்மிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில்., மும்பையில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு மூன்று வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில்., இந்த தம்பதியினர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் வசித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று குழந்தையை ஏழாவது மாடியிலிருந்து யாரோ தூக்கி வீசி கொலை செய்துள்ளனர். ஏழாவது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நிலையில்., இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் துவங்கினர்.
அந்த விசாரணையில்., குழந்தையின் தந்தை மற்றும் அவரது நண்பர் குழந்தையை ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும்., குழந்தையின் தந்தை மற்றும் அவரது நண்பர் கைது செய்த காவல்துறையினர்., குழந்தை எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in mumbai baby killed by her father friend police investigation going on