கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிய கார்.! பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் துடிதுடித்து பலி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதிலும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துகளால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில்., சாலை விபத்துகள் தொடர்கதையாகியுள்ளது. 

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் நகர் அருகே வேகமாக சென்று கொண்டு இருந்த காரொன்று., ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து தாறுமாறாக சாலையில் ஓடியது. 

இந்த சமயத்தில்., சாலையின் எதிர்புறம் வந்த வாகனத்தின் மீது கார் பயங்கரமாக மோதிரத்தை அடுத்து., விபத்தில் இரண்டு கார்களும் கடுமையான சேதமடைந்தது. 

மேலும்., காரில் இருந்த நபர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்காக அலறித்துடித்த நிலையில்., இது குறித்த தகவல் காவல் துறையினருக்கும் - அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 

இந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த நிலையில்., வாகனத்தில் இருந்த மேலும் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madhya pradesh car accident peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->