சந்தேகத்திற்கு இடமில்லாமல் மனைவி கொலை.. கணவன் சிக்கியது எப்படி?..!!
in karnadaga wife killed by her husband
இந்தியாவில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் தேஜ் சிங் (வயது 27). இவரது மனைவியின் பெயர் தீபால் (வயது 27). தேஜ் சிங் நகை வியாபாரியாக பணியாற்றி வரும் நிலையில்., கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இவர் குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் உன்சேமாரனஹல்லி பகுதியில் வசித்து வந்தனர்.
கடந்த நவம்பர் மாதத்தின் 17 ஆம் தேதியன்று நண்பரின் உதவியோடு காரொன்றை வாடகைக்கு எடுத்த தேஜ் சிங்., தனது மனைவியை அழைத்து கொண்டு அங்குள்ள நந்தி மலைநோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தார். இந்த நிலையில்., காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட தேஜ்., காவல் துறையினரிடம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனது மனைவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீபாலின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த விசாரணையில் தானும் - தனது மனைவியும் நந்தி மலைக்கு சென்ற நேரத்தில்., மனைவி காரை நிறுத்த சொன்னார்.
அவர் காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்த போது அடையாளம் தெரியாத காரில் மோதி தூக்கி வீசப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும்., இவர் பேசிய பாணியானது காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில்., அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பின்னர் கார் மோதியிருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில்., தனக்கும் - தனது மனைவிக்கும் இடையே இருந்த குடும்ப சண்டையின் காரணமாக மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு., நந்தி மலைக்கு அழைத்து சென்று., வழியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேஜ் சிங்கை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in karnadaga wife killed by her husband