மருமகளுக்கு தாயாக இருந்து மாமியார் செய்த சிறப்பு..! பிற மாமியார் - மருமகள் கற்றுக்கொள்ள வேண்டும்..!! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த இல்லத்திற்குள் இருக்கும் பிரச்சனைகளில் பெரும் பிரச்சனையாக இன்றளவும் இருந்து வருவதாக பேசிக்கொண்டு இருப்பது மாமியார் - மருமகள் உறவு. தனது மருமகளை மகள் போல பார்க்கும் உள்ளங்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்., மாற்றான் வீட்டு பிள்ளையாக கூட நினைக்காமல் இருக்கும் கொடூர எண்ணங்கள் கொண்ட நபர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஓசநகர் தாலுகாவில் அமைந்துள்ள மாருதிபுரா கிராமத்தை சார்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவியின் பெயர் லோலாக்‌ஷி. இவர்கள் இருவருக்கும் மஞ்சுநாத் என்ற மகன் இருக்கிறார். இதே பகுதியில் உள்ள அனந்தப்பூர் தாலுகா கிரகரா கிராமத்தை சார்ந்தவர் வீணா (வயது 22). 

died, murder, suicide attempt,

மஞ்சுநாத்திற்கும் - வீணாவிற்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., கடந்த இரண்டு வருடமாக மஞ்சுநாத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடுமையாக அவதியடைந்து வந்துள்ளார். இதனால் சிகிச்சையும் பெற்று வந்த நிலையில்., வீணாவும் கர்ப்பமாகியுள்ளார். இந்த நேரத்தில் சிகிச்சை பலனின்றி மஞ்சுநாத் இயற்கையை எய்தியுள்ளார்.  

தன் வாழ்க்கையில் ஏற்பட்ட துயரத்தை எண்ணி வீணா வருந்தியிருந்த நிலையில்., தாயாக இருந்து மாமியார் லோலாக்‌ஷி கவனித்து வந்துள்ளார். மேலும்., நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வீணா ஆண் குழந்தையை பிரசவித்த நிலையில்., குழந்தைக்கு யாஷ்மிக் என்று பெயரும் சூட்டி மருமகளையும்., பேரனையும் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். 

marriage, indian marriage,

இளம் வயதிலேயே அதிக கஷ்டத்தை தனது மருமகள் அனுபவிப்பதை கண்டு மனத்துயருக்கு உள்ளாகி மறுமணம் நடத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து மருமகளுக்கு மாப்பிள்ளை தேடிய சமயத்தில்., அங்குள்ள பிளக்கொடி மிராமத்தை சார்ந்த கணேஷா என்பவர் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த திருமணத்திற்கு லோலாக்‌ஷி குடும்பத்தினர் மற்றும் வீணாவுடைய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து இருவருக்கும் தடபுடலாக திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்று சிவமொக்கா அருகேயுள்ள பொண்ணாநகர் பகுதியில் இருக்கும் கணபதி கோவிலில் திருமணமும் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும்., கணேஷுவிற்கு இது முதல் மணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in karnadaga girl marriage second by his died husband mom help


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->