எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறல்.. குண்டுகளை வீசி தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகளவு இருக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் இராணுவத்தினர் எந்த சமயத்தில் விழிப்புடன் இருந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் மட்டுமல்லாது பாகிஸ்தான் இராணுவத்தினரும் அவ்வப்போது எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது. இவர்களுக்கு இந்திய இராணுவத்தின் சார்பாக பதிலடியும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பாக்கிஸ்தான் இராணுவத்தினர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராஜ்புரி மாவட்டத்தில் இருக்கும் மஞ்சுகோட் செக்டர் பகுதியில் ராஜதானி மொஹ்ரா கிராமம் இருக்கிறது. 

இந்த கிராமத்தில் பாக்கிஸ்தான் இராணுவத்தினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் உயிர்சேதம் ஏதும் இல்லாத பட்சத்திலும், வீடுகள் சேதமடைந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Jammu Kashmir Pak army attack indian village


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->