14 மாத குழந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பரிதாபம்.. குஜராத்தில் பெரும் சோகம்.!!
in Gujarat child baby died positive corona virus
உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்கத்தால் இந்தியாவில் 4789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 133 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் மாவட்டத்தை சார்ந்த தம்பதியின் 14 மாத பச்சிளம் குழந்தை உடல்நலக்குறைவால் அவதியுற்று இருந்துள்ளது.
இந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குழந்தையின் உடல் உறுப்புகளும் அடுத்தடுத்து செயலிழந்து வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் செயற்கை சுவாசத்தை குழந்தைக்கு அளித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இரண்டு நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், பச்சிளம் 14 மாத குழந்தை கரோனா வைரசால் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் தற்போது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Gujarat child baby died positive corona virus