மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் ஆறுமாதம் ஜெயில்... அமலான அதிரடி உத்தரவு..!!
in Delhi govt announce without mask coming outside penalty
கரோனா வைரஸின் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரோனாவால் பலியான நபர்களின் எண்ணிக்கை 199 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லி நகரில் நேற்று முதல் வீட்டில் இருந்து வெளியே வரும் நபர்கள் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனை மற்றும் ரூ.200 அபராதம் வசூல் செய்யப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Delhi govt announce without mask coming outside penalty