டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்த சோகத்தில்... அதிர்ச்சியாகும் வகையில் உயர்ந்த பலி எண்ணிக்கை.!!
in Delhi building fire accident peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் அரங்கேறி., இதனால் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
ஒரு சில இடங்களில் அதிஷ்டத்தின் காரணமாக மக்கள் தப்பித்தாலும்., சில இடங்களில் நடைபெறும் விபத்துகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேலும் இதற்கு அருகில் இருக்கும் அனாஜ் மண்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 50 க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சுமார் 30 தீயணைப்பு வாகனங்களில் சென்றுள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 32 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில்., தற்போது வரை மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கையானது 43 ஆக உயர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., இது குறித்து தகவலறிந்த அமித் ஷா மற்றும் இந்திய பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்து., காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்., தேவையான உதவிகளை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in Delhi building fire accident peoples died