சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை.. நியாயம் கேட்டதற்கு உயிருடன் கொளுத்திய கொடூரன்.. அரங்கேறிய சோகம்..!!
in bihar girl sexual harassment and killed
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து., தீவைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபர்களே பெண்ணிற்கு தீவைத்து கொலை செய்த கொடூரமும் அரங்கேறியது.
இந்த நிலையில்., தற்போது பீகாரில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சாம்பவார் மாவட்டம் உள்ள கிராமத்தை சார்ந்த 19 வயது சிறுமி., அவரது தாயுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில்., வேலைக்கு இடையே சமையல் செய்வதற்காக பெண்ணின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நேரத்தில்., சிறுமி வயலில் தனிமையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த இளைஞன் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். கொடூரனின் பிடியில் இருந்து சிறுமி தப்பி வந்து தன் தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் அர்மானிடம் சென்று திருமணம் செய்து கொள்ளக்கூறி பேசியுள்ளார்.
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தகொடூரன் வீட்டில் நுழைந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளான். சிறுமி தீயின் வீரியம் தாங்க இயலாது அலறவே., இவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
in bihar girl sexual harassment and killed