காதலியை தீயிட்டு கொளுத்தியது எதற்க்காக?.! வெளியாகும் பகீர் தகவல்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள கபுர்கி நகர் பகுதியை சார்ந்தவர் ஷிபரணி ஜெயபிரபு (வயது 22). கல்லூரி மாணவியான இவர் அங்குள்ள கலைக்கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த ரவிக்குமார் என்ற இளைஞருக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்த நிலையில்., இவர்களின் நெருக்கத்தால் ஷிபரணி கர்ப்பணியாகியுள்ளார். இந்த விஷயத்தை தனது காதலரிடம் தெரிவித்ததை அடுத்து., இருவரும் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். 

இவர்களின் திட்டப்படி அங்கிருக்கும் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பிற்க்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில்., மருத்துவமனையில் ஷிபரினிக்கு போடப்பட்ட ஊசியின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

died, murder, killed, suicide attempt, கொலை, தற்கொலை, குற்றம்,

இதனை அறிந்து பயந்துபோன ரவிக்குமார்., ஷிபரணியின் உடலை தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் வைத்து., பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த சமயத்தில்., மகளை காணாத பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். 

இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்த தருணத்தில்., தெலுங்கானா காவல் துறையினர் பாதி எறிந்த நிலையில் உள்ள பெண்ணின் உடலை கைப்பற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்கு பின்னர் ரவிக்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். 

ரவிகுமாரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில்., இந்த கொலை குறித்த காரணம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்., இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Bangalore girl killed by her lover police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->