கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி., கருக்கலைப்பு என்ற பெயரில் கொலை செய்த காதலன்.! வெளியான பேரதிர்ச்சி தகவல்..!!
in Bangalore girl killed by her lover after death during abortion
கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதியை சார்ந்தவர் எஸ்தர் ராணி (வயது 23). இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வந்த நிலையில்., அதே பகுதியை சார்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில்., இவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததை அடுத்து., இராணி கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த ராணி தனது காதலரிடம் இது குறித்து தெரிவிக்கவே., இதனை கேட்டு இருவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விஷயம் வெளியே தெரிந்த அவமானம் என்று கருதிய இருவரும்., கருக்கலைப்பு செய்ய முடிவு செய்து., தனியார் மருத்துவமனைக்கு கருக்கலைப்பிற்கு சென்றுள்ளனர். இந்த சமயத்தில்., கருக்கலைப்பிற்காக அனுமதி செய்யப்பட்டு சிகிச்சை நடைபெற்று வந்துள்ளது.
இந்த தருணத்தில்., எதிர்பாராத விதமாக இராணி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த விஷயத்தை காதலனிடம் கூறிய மருத்துவர்கள் செய்வதறியாது திகைக்கவே., காதலன் தனது நண்பர்களின் உதவியோடு பெண்ணின் உடலை காரில் ஏற்றி., பெட்ரோல் ஊற்றி ராணியை எரித்துள்ளனர்.
இந்த சமயத்தில்., ராணியை காணவில்லை என்று கூறி பெற்றோர்கள் புகார் அளிக்கவே., இதனை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த தருணத்தில்., கார் ஒன்று எரிந்து கொண்டு இருப்பதாகவும்., காரில் பெண்ணின் உடல் இருப்பதாகவும் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., காரில் கருகிய நிலையில் இருந்தது ராணி என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு., ராணியின் காதலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Bangalore girl killed by her lover after death during abortion