கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணப்பெண்... இரண்டே மாதத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய பேரதிர்ச்சி.!!
in assam girl suicide within finished marriage 2 months while dance in function
திருமணத்தில் உற்சாகமாக நடனமாடிய பெண்மணி சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக வலம்வந்த நிலையில், தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பகுதியை சார்ந்தவர் மர்சி போரா. இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமேடையில் அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
இவர் மணமேடையில் நடனமாடியது இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த உற்சாக நடனம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில், இவரது திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆகும் நிலையில், இவர் கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வீட்டில் பிணமாக தொங்கியுள்ளார். மர்சியின் கணவர் மும்பையில் இருந்த நிலையில், தனது மனைவியை காண வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த சமயத்தில், மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மர்ஸியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in assam girl suicide within finished marriage 2 months while dance in function