#புதுச்சேரி || தனிக்குடித்தனம் செல்ல மனைவி வற்புறுத்தியதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் தனிக்குடித்தனம் செல்ல மனைவி வற்புறுத்தியதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் வீராம்பட்டினம் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(33). இவர் பிள்ளையார் குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி விமலகுமாரி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் மனைவி விமலகுமாரி தனிக்குடித்தம் செல்ல வேண்டும் என்று அடிக்கடி கணவரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் மருமகள்-மாமியார் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து சம்பவத்தன்று பாலமுருகன் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது அவரது மனைவிக்கும், தாயாருக்கும் இடையே தனிகுடித்தனம் செல்வது தொடர்பாக பிரச்சனை நடந்துள்ளது.

இதனால் மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு பாலமுருகன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியையும், குழந்தையையும் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்து மனவேதனை அடைந்த பாலமுருகன் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். 

இதையடுத்து பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband suicide in Puducherry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->