குழந்தை பெற்ற 16 நாட்களிலேயே மனைவியை வெட்டி கொன்ற கணவன்.. கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


குழந்தை பிறந்த சில நாட்களிலேயே பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாமாநிலம், மாள மங்களத்து பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப். இவரது மனைவி ஆஷிதா. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரவத்திற்காக அவரது தந்தை வீட்டிற்கு சென்றார். இவருக்கு 16 நாட்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பிறந்தது. மனைவியையும் குழந்தையையும் 16 நாள் ஆகியும் கணவன் பார்க்க செல்லவில்லை.

இந்நிலயில், சம்பவதன்று அவரது குழந்தையையும் மனைவியையும் பாக்க சென்றார்.அப்போது பேசி கொண்டிருந்த அவர் திடீரென வாளை எடுத்து முகமது ஆசிப், திடீரென மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில், ஆஷிதா ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் பெற்றோர் மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஆசிப்பை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband kills his wife in Kerala


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->