கழுத்தை நெரித்து மனைவி கொலை.. தற்கொலை என நாடகமாடிய கணவன் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் குட்டேனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆதி(26). இவரது மனைவி ஸ்ரீ (23). இந்நிலையில் கணவன்-மனைவியுடைய கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆதி, மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினமும் இவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஆதி மனைவியை கழுத்தை நெரித்துள்ளார். இதனால் ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அதிர்ச்சியடைந்த ஆதி, கொலையை மறைப்பதற்காக ஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்ரீ இன் உடலை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஸ்ரீயின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கணவர் ஆதியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆதி, ஸ்ரீயை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆதியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for murder his wife in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->