உதம்பூரில் கோர விபத்து...! மலைப்பாதையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து..! - 15 பேர் உடல் சிதறி பலி
Horrific accident Udhampur Bus falls off mountain road valley 15 people die
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் அருகேயுள்ள ககோர் கிராமப் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த பேருந்து விபத்து, பரிதாபகரமான காட்சிகளை உருவாக்கியுள்ளது.
மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கொண்டை ஊசி வளைவை கடக்கும்போது ஏற்பட்ட இந்த விபத்தில், 15 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் நடந்த உடனே அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த துயரச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணங்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்; மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
English Summary
Horrific accident Udhampur Bus falls off mountain road valley 15 people die