கொலையாளிகளை பகவான் ஸ்ரீராமர் உருவமென பாராட்டிய இந்து மகாசபா.! அத்தீக் சகோதரர்கள் கொலை வழக்கில் பகீர்.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேச மாநிலத்தில் அரசியல்வாதியும், பிரபல தாதாவுமான அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகிய இருவரும் சிறையில் இருந்து மருத்துவமனை பரிசோதனைக்காக வரும்போது மூன்று சமூக விரோதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரை கொலை செய்த மூன்று பேருக்கும் ஆதரவு தெரிவித்திருப்பதோடு அவர்களுக்கு உதவுவதாகவும் அம்மாநில இந்து மகா சபை அறிவித்திருக்கிறது.

நில ஆக்கிரமிப்பு, ஆட்கடத்தல் மற்றும் கொலை உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அசரஃப் அகமது ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட போது லவ்லேஷ் திவாரி (22),சன்னிசிங் (23)  மற்றும் அருண் மௌரிய 18) ஆகிய மூன்று பேரும் இயந்திரத்துப்பாக்கிகளால் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரரை சுட்டு படுகொலை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அவர்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர். இது தொடர்பாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இந்து மகாசபை ஜெய் ஸ்ரீ ராம் மக்களை அரக்கர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவர்களை கொலை செய்தது போன்று இந்த மூன்று இளைஞர்களும் இந்த அரக்கர்களை கொலை செய்துள்ளனர் என குறிப்பிட்டு  இருக்கிறது. மேலும் இது தொடர்பாக அந்த இளைஞர்களுக்கு ஆதரவாகவும்  அவர்களுக்கு உதவி புரிய இருப்பதாகவும் இந்து மகாசபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் எந்த மாதிரியான உதவி என்று அவர்கள் குறிப்பிடவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindu Mahasabha public announcement ready to help Atiq Ahmed killers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->