பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.! ஹரியானா அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநில அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹரியானா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஹரியானா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 100க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் பொது மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஹரியானா முழுவதும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana government makes wearing mask mandatory in public places


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->