நேரலையில் முன்னாள் கவுன்சிலருக்கு துப்பாக்கிச் சூடு.!
gun shoot at facebook live in mumbai
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. வினோத் கோசல்கர் மகன் அபிசேக். முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்று மும்பை தகிசர் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் 'முகநூல்' நேரலை விவாதத்தில் சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் கலந்துகொண்டார்.
அப்போது, மோரிஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிசேக்கை சரமாரியாக சுட்டுள்ளார். இதில், அபிஷேக் காயமடைந்து உயிருக்கு போராடினார். இதற்கிடையே, மோரிசும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இரண்டு பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னாள் கவுன்சிலர் அபிஷேக்கிற்கும், மோரிசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. இந்தநிலையில் மோரிஸ் தனது அலுவலகத்தில் நடைபெற்ற புடவை வழங்கும் நிகழ்ச்சிக்காக அபிஷேக்கை அழைத்து திட்டமிட்டு சுட்டுக்கொன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
English Summary
gun shoot at facebook live in mumbai