வேறொருவருடன் தொடர்பு - ஆத்திரத்தில் மனைவி மகளுடன் வாலிபர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்காள மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் கர்தா பகுதியில் உள்ள எம்எஸ் முகர்ஜி சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்தக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியதனால் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளேச் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் நான்கு பேரின் சடலங்கள் இருந்துள்ளது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் பேசியதாவது, "உயிரிழந்தவர்கள் துணி வியாபாரி பிருந்தாபன் கர்மாகர், மனைவி தேபஸ்ரீ கர்மாகர், அவர்களது மகள் டெபலீனா மற்றும் மகன் உத்சாஹா என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் போலீசார் பிருந்தாபன் வீட்டில் சோதனை செய்த போது அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதில், தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், அதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும், அதனால்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் எழுதியிருந்தார். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four peoples sucide in west bengal


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->