திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது சோகம் - பேருந்து மோதி 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள உகனே அணைக்கரை அருகே ஹோஸ்துர்கா-ஹோலல்கெரே சாலை பகுதியில் தாவங்கரே நோக்கி திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு 35 பேருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர்  உடல் நசுங்கி பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சக வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for accident in karnataga


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->