ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து - 4 பேர் பலி; 12 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் உள்ள, சூர்யபேட்டை மாவட்டம், கம்மம் நெடுஞ்சாலையில் ஆட்டோ ஒன்று 15 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோ அப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதை அருகே சென்றபோது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நான்கு பெண் விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டனர். 

பின்னர் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த தொழிலாளர்கள், முனகலா அருகே உள்ள ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மோத்தே அருகே உள்ள புர்காச்செர்லா கிராமத்தில் உள்ள வயல்களில் வேலை செய்வதற்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். 

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்குச் சென்ற போது விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died and 12 peoples injured for accident in telangana


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->