காதலுக்கு தடையாக இருந்த கணவர்.!! காதலர்களை வைத்து தீர்த்து கட்டிய மனைவி கைது.! - Seithipunal
Seithipunal


காதலுக்கு தடையாக இருந்த கணவர்.!! காதலர்களை வைத்து தீர்த்து கட்டிய மனைவி கைது.!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தில் ரக்சியா பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கும் மாதுரி அகிர்வார் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் மாதுரி அகிர்வாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் ரகுவர், குல்தீப் சதுர்வேதி, சோடூ பரிஹார், தீன்தயாள் உள்ளிட்ட நான்கு பேருடன் கல்லாத தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்த தகவல் கணவர் சிவாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சிவாவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மனைவி மாதுரி தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக நினைத்து தனது கள்ளக்காதலர்கள் நான்கு பேரைக் கொண்டு கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன் படி அவர்கள் சிவாவை அழைத்து சென்று மது விருந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் அடித்து கொன்றுள்ளனர். 

இந்த கொலை சம்பவம் சிவாவின் சகோதரருக்குத் தெரிய வர அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் சிவாவின் மனைவி மற்றும் அவரது காதலர்கள் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for kill man in uttar pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->