வாக்காளர்களுக்கு 7000 ரூபாய் - தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? கொண்டாட்டத்தில் வாக்காளர்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மிகச்சிறிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி மட்டுமே இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற 11 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் 7,02,189 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 63 % பேர் வாக்களித்தனர். பழங்குடி இன தொகுதி என்று வகைபடுத்தப்பட்ட இந்த தனித் தொகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு குறைவான அளவிலேயே இருந்து வருகிறது.

எனவே இந்த முறை வாக்குபதிவு சதவீதத்தை அதிகரிக்க திட்டமிட்ட தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது.

கடந்த ஆண்டு மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்த போது சுமார் 80 % வாக்குகள் பதிவானது. தற்போது பாராளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 90 % பேரை வாக்களிக்க வைக்க மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆசிஷ்குந்த்ரா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.

இதற்காக அவர் இளைஞர்களுக்கும், முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கும் செல்பி போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள ‘மை’யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

வாக்களித்ததை உறுதி செய்ததை காட்டும் மிகச் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரம் பரிசும், 3வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First-Time-voters-ink-put-on-the-finger-sent-photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->