நடுவழியில் வெடித்துச் சிதறிய பட்டாசு லாரி.! ராமர் கோவிலுக்குச் செல்லும் போது நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு வருகிற 22 ஆம் தேதி மகா கும்பாபிசேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் ஆலய மணி, ஊதுபத்தி என்று பல்வேறு பொருட்களைக் காணிக்கையாக அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து அயோத்தி ராமர் கோவிலூக்காக பட்டாசுகளை ஏற்றி சென்ற லாரி நடுவழியில் திடீரென தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. 

இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

firecracker lorry accident


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->