ரசாயன ஆலையில் வெடித்த தீ விபத்து ...! - 7 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்த சோகம்...! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குஷ்கேரா–கரோலி தொழில்துறை வளாகத்தில் செயல்பட்டு வந்த அந்த ஆலையில் திடீரென பரவிய தீயில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், இரு தொழிலாளர்கள் தொழிற்சாலை கட்டிடத்திற்குள் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கூடுதல் மாவட்ட நீதிபதி சுமிதா மிஸ்ரா கூறுகையில், அந்த பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் இருந்த போலீஸார் தீ விபத்தை கவனித்து உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.

ஆலையின் உள்ளே மொத்தம் 9 பேர் சிக்கிய நிலையில், இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இருவரை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றார்.

இதற்கிடையில், நேற்று கர்நாடகா மாநிலத்தின் பசராலு பகுதியில் அமைந்த தனியார் தொழிற்சாலையிலும் வேறு ஒரு துயர சம்பவம் நடந்தது.

அங்கு ரசாயன சேமிப்பு தொட்டி வெடித்ததில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய தொழிற்சாலை விபத்துகள் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறியை எழுப்பியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire breaks out chemical plant Tragedy 7 workers die fire


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->